நீ தொட்டு ரசித்ததாலோ என்னவோ
என் பாத சரங்கள்
காதல் காதலேன்றே
இசைக்கின்றது .......
சுரேகா முருகேசன்.......
Tuesday, December 28, 2010
Friday, December 3, 2010
மௌனமாய் நினைத்துக் கொண்டேன்........
என்றோ அவன்
என் மீது விளையாட்டாய்
எரிந்த கற்கள்
இன்றும் என் வீட்டுக் கண்ணாடிக் கூண்டில்
அழகிய ஞாபகச் சின்னமாய்....
அவன் கையெப்பமிட்டு கிறுக்கி
தூக்கி எரியப்பட்ட காகிதம்
இன்றும் என் கைப்பையில்
பத்திரமாக குடிகொண்டுள்ளது......
அவன் எனக்காக வாங்கிக்கொடுத்த
மிட்டாயின் காகிதங்கள்
என் அறையில் ஆங்காங்கே அவனை
ஞாபகபடுத்திக் கொண்டிருகின்றது.......
இப்படி அவன் கைப்பட்ட ஒவ்வொரு
பொருளையும் பார்த்துவிட்டு
செல்லமாய் என் தலையில் தட்டிவிட்டு
சிரித்துக்கொண்டே கூறினான்
" இவ எப்போதுமே இப்பிடித்தா
கண்டதையும் குப்ப மாதிரி சேர்த்து வைப்பா"
என்று தன் மனைவியிடம்........
நானும் மௌனமாய் சிரித்துவிட்டு
மனதுக்குள்ளேயே நினைத்துக் கொண்டேன்
" நீயும் எப்பொழுதும் போலத்தான் இன்னும் என்னை
புரிந்து கொள்ளவில்லை என்று"
சுரேகா முருகேசன்.......
என் மீது விளையாட்டாய்
எரிந்த கற்கள்
இன்றும் என் வீட்டுக் கண்ணாடிக் கூண்டில்
அழகிய ஞாபகச் சின்னமாய்....
அவன் கையெப்பமிட்டு கிறுக்கி
தூக்கி எரியப்பட்ட காகிதம்
இன்றும் என் கைப்பையில்
பத்திரமாக குடிகொண்டுள்ளது......
அவன் எனக்காக வாங்கிக்கொடுத்த
மிட்டாயின் காகிதங்கள்
என் அறையில் ஆங்காங்கே அவனை
ஞாபகபடுத்திக் கொண்டிருகின்றது.......
இப்படி அவன் கைப்பட்ட ஒவ்வொரு
பொருளையும் பார்த்துவிட்டு
செல்லமாய் என் தலையில் தட்டிவிட்டு
சிரித்துக்கொண்டே கூறினான்
" இவ எப்போதுமே இப்பிடித்தா
கண்டதையும் குப்ப மாதிரி சேர்த்து வைப்பா"
என்று தன் மனைவியிடம்........
நானும் மௌனமாய் சிரித்துவிட்டு
மனதுக்குள்ளேயே நினைத்துக் கொண்டேன்
" நீயும் எப்பொழுதும் போலத்தான் இன்னும் என்னை
புரிந்து கொள்ளவில்லை என்று"
சுரேகா முருகேசன்.......
Monday, November 15, 2010
மௌனராணி......
எதேதோ பேச என்னி
ஓராயிரம் வார்த்தைகளை
ஒய்யாரமாக அணிவகுத்து
ஓராயிரம் முறை ஒத்திகைப் பார்த்து
உன் முன் வந்ததும் ஏனோ
என் மௌனராணி என்னை
ஆக்கிரமித்துக்கொள்கிறாள்...............
சுரேகா முருகேசன்.......
உன்னவளாய்......
உன் மூச்சு
என் ஸ்பரிசம் தொட்டு
உணர்ச்சிகளை கடந்து
உள்ளூர விளையாடி
ஒவ்வொரு அணுக்களிடத்தும் உறவாடி
குருதியுடன் கலந்தோடும் வேளையில்
உன்னவளாய்
நான் இருக்கும் காலம்
உண்மையில் நடந்தேருவது
எப்போது??
என் ஸ்பரிசம் தொட்டு
உணர்ச்சிகளை கடந்து
உள்ளூர விளையாடி
ஒவ்வொரு அணுக்களிடத்தும் உறவாடி
குருதியுடன் கலந்தோடும் வேளையில்
உன்னவளாய்
நான் இருக்கும் காலம்
உண்மையில் நடந்தேருவது
எப்போது??
Saturday, October 30, 2010
மௌனத்தையும் நேசிக்கிறேன்...
அன்பால் பூத்தது....
அழகாய் மலர்ந்தது-
என் இதயத்தில்
அவன் நினைவுகளுடன் கூடிய காதல்......
நான் சோர்ந்த நேரங்களில்
அவன்
இதமாக அணைத்த பொழுதுகளில்.....
கடற்கரையில் கால் நனைத்த
அந்த அழகிய மாலை பொழுதுகளில்....
யாருமில்லா சாலையில்
அவன் கைகோர்த்து
நடந்த அழகிய இரவுகளில்...
சிரிப்புகளுக்கு இடையே
அவனின் சிதறவிடும் பார்வைகளில்....
இன்னும் அவன் வெளிபடுத்தாத
காதலின்
மௌனத்தையும் சேர்த்து நேசிக்கிறேன்...
அழகாய் மலர்ந்தது-
என் இதயத்தில்
அவன் நினைவுகளுடன் கூடிய காதல்......
நான் சோர்ந்த நேரங்களில்
அவன்
இதமாக அணைத்த பொழுதுகளில்.....
கடற்கரையில் கால் நனைத்த
அந்த அழகிய மாலை பொழுதுகளில்....
யாருமில்லா சாலையில்
அவன் கைகோர்த்து
நடந்த அழகிய இரவுகளில்...
சிரிப்புகளுக்கு இடையே
அவனின் சிதறவிடும் பார்வைகளில்....
இன்னும் அவன் வெளிபடுத்தாத
காதலின்
மௌனத்தையும் சேர்த்து நேசிக்கிறேன்...
Subscribe to:
Posts (Atom)