Wednesday, February 9, 2011

தலையணை.....



நான்
அணைக்கும் பொழுதுகளில்
அவனாகவும்
அவன்
அணைக்கும் பொழுதுகளில்
நானாகவும்
உருமாறும் தலையணை
ஆண்பாலா????? பெண்பாலா????...

சுரேகா முருகேசன்.......

குரல்...



நினைவுகள் சூழ்ந்த
நிதர்சமான அந்திப் பொழுதில்
இதமாக இருந்தது
என்றோ என் கைபேசியில்
நான் பதிந்து வைத்திருந்த
அவனின்
மனதை மயக்கும் குரல்...

சுரேகா முருகேசன்.......

புன்னகை........




கைக்கெட்டாமல் கனவாக இருந்தது- இன்று
கையில் கிடைத்தது......
கனவோ நினைவோ என்று
பதறிய மனதுக்குள் திடீர் சிலிர்ப்பு
உண்மைதான் .......
என் கரங்களை பிடித்தது
அவன் கரங்களே....
நீடிக்குமோ இந்த சுகம் என்று
அவனை ஏக்கமாய் பார்த்தேன்......
இனி உன்னைவிட்டு பிரியமாட்டேன் என்று
சொன்னது அவனின் அழகிய புன்னகை........

சுரேகா முருகேசன்.......