Tuesday, December 28, 2010

காதல் இசை..

நீ தொட்டு ரசித்ததாலோ என்னவோ
என் பாத சரங்கள்
காதல் காதலேன்றே
இசைக்கின்றது .......

சுரேகா முருகேசன்.......

Friday, December 3, 2010

மௌனமாய் நினைத்துக் கொண்டேன்........

என்றோ அவன்
என் மீது விளையாட்டாய்
எரிந்த கற்கள்
இன்றும் என் வீட்டுக் கண்ணாடிக் கூண்டில்
அழகிய ஞாபகச் சின்னமாய்....
அவன் கையெப்பமிட்டு கிறுக்கி
தூக்கி எரியப்பட்ட காகிதம்
இன்றும் என் கைப்பையில்
பத்திரமாக குடிகொண்டுள்ளது......
அவன் எனக்காக வாங்கிக்கொடுத்த
மிட்டாயின் காகிதங்கள்
என் அறையில் ஆங்காங்கே அவனை
ஞாபகபடுத்திக் கொண்டிருகின்றது.......
இப்படி அவன் கைப்பட்ட ஒவ்வொரு
பொருளையும் பார்த்துவிட்டு
செல்லமாய் என் தலையில் தட்டிவிட்டு
சிரித்துக்கொண்டே கூறினான்
" இவ எப்போதுமே இப்பிடித்தா
கண்டதையும் குப்ப மாதிரி சேர்த்து வைப்பா"
என்று தன் மனைவியிடம்........
நானும் மௌனமாய் சிரித்துவிட்டு
மனதுக்குள்ளேயே நினைத்துக் கொண்டேன்
" நீயும் எப்பொழுதும் போலத்தான் இன்னும் என்னை
புரிந்து கொள்ளவில்லை என்று"

சுரேகா முருகேசன்.......