Monday, November 15, 2010

மௌனராணி......


எதேதோ பேச என்னி
ஓராயிரம் வார்த்தைகளை
ஒய்யாரமாக அணிவகுத்து
ஓராயிரம் முறை ஒத்திகைப் பார்த்து
உன் முன் வந்ததும் ஏனோ
என் மௌனராணி என்னை
ஆக்கிரமித்துக்கொள்கிறாள்...............

சுரேகா முருகேசன்.......

உன்னவளாய்......

உன் மூச்சு
என் ஸ்பரிசம் தொட்டு
உணர்ச்சிகளை கடந்து
உள்ளூர விளையாடி
ஒவ்வொரு அணுக்களிடத்தும் உறவாடி
குருதியுடன் கலந்தோடும் வேளையில்
உன்னவளாய்
நான் இருக்கும் காலம்
உண்மையில் நடந்தேருவது
எப்போது??