Saturday, October 30, 2010

மௌனத்தையும் நேசிக்கிறேன்...

அன்பால் பூத்தது....
அழகாய் மலர்ந்தது-
என் இதயத்தில்
அவன் நினைவுகளுடன் கூடிய காதல்......
நான் சோர்ந்த நேரங்களில்
அவன்
இதமாக அணைத்த பொழுதுகளில்.....
கடற்கரையில் கால் நனைத்த
அந்த அழகிய மாலை பொழுதுகளில்....
யாருமில்லா சாலையில்
அவன் கைகோர்த்து
நடந்த அழகிய இரவுகளில்...
சிரிப்புகளுக்கு இடையே
அவனின் சிதறவிடும் பார்வைகளில்....
இன்னும் அவன் வெளிபடுத்தாத
காதலின்
மௌனத்தையும் சேர்த்து நேசிக்கிறேன்...